போராட்டத்தின் காரணமாக 39 மில்லியன் ரூபா இழப்பு….. அஜித் ரோஹன!!

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்திருந்த மிரிஹான பகுதியில் ஏற்பட்ட போராட்டத்தின் காரணமாக 39 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 53 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 18 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 24 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் பொதுக்கள் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் களுபோவில, ஸ்ரீஜயவர்தனபுர மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *