“முழங்கால் தெரிய ஆடை அணிந்து வரும் பெண்களுக்குக்காக” நல்லூரில் புதிய நடைமுறை!!
நல்லூர் ஆலயத்தில் இந்து மத பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆலயத்திற்குள் சால்வையை அணிந்து சென்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் அதனை பை ஒன்றிலிட்டு வழங்கப்பட்ட இடத்திலுள்ள பெட்டியில் மீள வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

ஆலயத்திற்குள் சால்வையை அணிந்து சென்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் அதனை பை ஒன்றிலிட்டு வழங்கப்பட்ட இடத்திலுள்ள பெட்டியில் மீள வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.