முல்லைத்தீவு நாயாற்றில் கவிழ்ந்தது கடற்படையின் படகு!!

முல்லைத்தீவு காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட நாயாறு கடற்பரப்பில் கவிழ்ந்த கடற்படை படகு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

நாயாறு கடற்படை முகாமில் இருந்து கடலுக்கு சென்ற குறித்த கடற்படை படகு நேற்றைய தினம் பிற்பகல் ஒரு மணியளவில் கடற்சீற்றம் காரணமாக கவிழ்த்துள்ளது.

சட்டவிரோத மீன்பிடி படகுகளை கண்காணிக்கவென கடலுக்கு சென்ற குறித்த கடற்படை படகு கடற்சீற்றம் காரணமாக கவிழ்த்துள்ளது

இந்த படகில் மூன்று கடற்படையினர் பயணம் செய்த நிலையில் படகு கவிழ்ந்ததும் ஒருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளதோடு மற்றய இருவரும் வேறொரு படகொன்றின்மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த கவிழ்ந்த படகு கடற்படையினர் மற்றும் கிராம மீனவர்களின் ஒத்துழைப்புடன் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *