மருமகனால் மாமனார் அடித்து கொலை!!

புத்தளம் – சேகுவந்தீவு பகுதியில் மாமனாரை மருமகன் தாக்கி கொலை செய்துள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதிலேயே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இதன்போது தழுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை செய்த சந்தேக நபர் புதுவருட தினத்தன்று குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு நேற்று முந்தினம் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்ற நிலையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தேக நபர் புத்தளம் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *