யாழ்ப்பாணத்தில் அதிகாலை வேளை நடந்த துயரம்!!

யாழ். மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று (11) அதிகாலை சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.

மாதகல் குசுமாந்துறையைச் சேர்ந்த திலீபன் (வயது-32) என்ற மீனவரே இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.

குறித்த மீனவர் தொழிலுக்குச் சென்ற படகு மாதகல் கடற்பரப்பில் 200 மீற்றர் தூரத்தில் கவிழ்ந்து காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து உள்ளூர் மீனவர்களினால் படகு மீட்கப்பட்டதுடன், உயிரிழந்த மீனவரின் சடலமும் மீட்கப்பட்டது.

மீனவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது என உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டும் நிலையில் கடற்படையினர் அதனை மறுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *