களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலைய இரு மின்பிறப்பாக்கிகளும் செயலிழப்பு!!

களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள இரண்டு மின்பிறப்பாக்கிகளும் எரிபொருள் இன்மையால் நேற்றிரவு முதல் செயலிழந்துள்ளன.

களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கியில் இருந்து 115 மெகாவொட் மின்சாரமும் மற்றுமொரு மின்பிறப்பாக்கியில் இருந்து 165 மெகாவொட் மின்சாரமும் தேசிய மின்கட்டமைப்புக்கு விநியோகிக்கப்படுகின்றது.

தேசிய மின்கட்டமைப்புக்கு 130 மெகாவொட் மின்சாரத்தை விநியோகிக்கும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின்,

ஒரு முனையத்தின் திருத்தப் பணிகள் இன்றைய தினத்துக்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.

இதுதவிர, எரிபொருள் இன்மையால் செயலிழந்திருந்த சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் தற்போது விநியோகிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *