கொரோனா மரணங்கள் அதிகரிக்கக்கூடும்! இராணுவ தளபதி தகவல்!!

எதிர்வரும் நாள்களில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று இராணுவத் தளபதியும் கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கும் அதேவேளை, கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் உயர்வடைகின்றது.

எதிர்வரும் நாள்களில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். ஒவ்வொருவரும் கொரோனாத் தடுப்பு சுகாதார விதிமுறைகளை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும்.

பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் நேரங்களில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு அவர்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.

கட்டுமீறிப் போன கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் அது மக்களின் நடவடிக்கைகளில்தான் தங்கியுள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *