LatestNews

கடலுக்கடியில் வெடித்துச் சிதறும் எரிமலை – தென் பசுபிக் பிராந்தியத்தில் சுனாமி பதற்றம்!!

பசுபிக் பிராந்திய கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கும் அபாயம் நீங்கியுள்ளதாக கண்காணிப்பு அமைப்பான பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.

சுனாமி அச்சுறுத்தல் குறைந்துவிட்ட போதிலும், கடலோரப் பகுதிகள் வலுவான அல்லது அசாதாரண நீரோட்டங்கள் ஏற்படுவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த மையம் கூறியுள்ளது.

தென் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள ரொங்காவில் கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடிக்கும் நிலையில், சுனாமி ஏற்படலாம் என அமெரிக்காவும் ஜப்பானும் எச்சரிக்கை விடுத்திருந்தன.

குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அந்த நாடுகள் அறிவுறுத்தியிருந்தன. குறிப்பாக ஜப்பானின் தென்பிராந்தியத்தை 1.2 மீற்றர் உயரமான கடலலை தாக்கியுள்ள, அதேவேளை இந்த அலையானது மூன்று மீற்றர் வரை உயரக் கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

பசுபிக் பிராந்திய கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கும் அபாயம் நீங்கியுள்ளதாக கண்காணிப்பு அமைப்பான பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.

சுனாமி அச்சுறுத்தல் குறைந்துவிட்ட போதிலும், கடலோரப் பகுதிகள் வலுவான அல்லது அசாதாரண நீரோட்டங்கள் ஏற்படுவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த மையம் கூறியுள்ளது.

தென் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள ரொங்காவில் கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடிக்கும் நிலையில், சுனாமி ஏற்படலாம் என அமெரிக்காவும் ஜப்பானும் எச்சரிக்கை விடுத்திருந்தன.

குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அந்த நாடுகள் அறிவுறுத்தியிருந்தன. குறிப்பாக ஜப்பானின் தென்பிராந்தியத்தை 1.2 மீற்றர் உயரமான கடலலை தாக்கியுள்ள, அதேவேளை இந்த அலையானது மூன்று மீற்றர் வரை உயரக் கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *