யாழ்ப்பாணம் – தட்டாதெரு பகுதியைச் சேர்ந்த இளைஞன் கீரிமலை கடலில்  கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்!!

கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர்  கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – தட்டாதெரு பகுதியைச் சேர்ந்த  சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது – 19) என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

தனது நண்பர்கள் இருவருடன் கீரிமலை கடலில் நீராடிக்கொண்டு இருந்த போதே குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் உடனடியாக காங்கேசன்துறை காவல்துறையினருக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *