யாழ்ப்பாண மக்களுக்கு மீளவும் ஏற்பட்ட ஏமாற்றம் – இடையூறு செய்யும் அரசாங்கம்!!
கடந்த வாரம் கிடைக்கப்பெற்ற 20லட்சம் சைனோபாம் தடுப்பூசிகளில் 50ஆயிரம் தடுப்பூசிகள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினால் உறுதியளிக்கப்பட்ட போதும் உரிய நேரத்தில் அது வழங்கப்பட்டவி்ல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு செல்வதாக சுகாதார அதிகாரதிகள் தெரிவித்து வருவதுடன் இது தொடர்பில் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.