கொரோனா தொற்றால் மேலும் ஐவர் மரணம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது.
இன்று – சிலாபத்தில் 72 வயதான ஆண் ஒருவரும், மக்கொனையில் 86 வயதான பெண் ஒருவரும், கொழும்பு 15இல் 76 வயதான ஆண் ஒருவரும், மஹரகமவில் 50 வயதான ஆண் ஒருவரும், வத்துபிட்டிவல பகுதியில் 86 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு உறுதிசெய்துள்ளது.