FEATUREDLatestNewsTOP STORIES

10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை….. அவசர அறிவிப்பு!!

நாட்டில் தற்போது பெய்து வரும் கனமழை தொடரும் என எதிர்வு கூறியுள்ள வளிமண்டலவியல் திணைக்களம்,

10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

இன்று (15/10/2022) வெளியான வானிலை அறிக்கையின் படி,

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும்.

Transparent umbrella under heavy rain against water drops splash background. Rainy weather concept.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *