LatestNews

கிழக்கில் சீனர்களுக்கு இடம் கிடையாது – திட்டவட்டமாக அறிவிப்பு!!

கிழக்கு மாகாணத்தில் சீனர்களுக்கு இடம் இல்லை என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர்,

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் நான் விசேடமாக அவதானம் செலுத்தி வருகின்றேன். கிழக்கு மாகாணத்தில் இருக்கிற அனைத்து இடங்களிலும் விவசாயிகள் மீனவர்கள் பாமர மக்கள் அவர்களுடைய பொருளாதாரத்தை வளர்த்து அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்வதே எனது நோக்கமாக செயற்பட்டுக் கொண்டு வருகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகளும் மீனவர்களும் இல்லை சாதாரண பாமர மக்களும் தங்களது கால்களில் நிற்கும் ஒரு நிலை உருவாகுமாக இருந்தால் சீனர்கள் இல்லை எந்த நாட்டவரும் இங்கே வந்து தொழில் செய்ய வேண்டிய தேவைப்பாடு கிடையாது.

ஆகவே எமது மாகாணத்தில் சாதாரண மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவது தான் எனது நோக்கம். கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் சீனர்களை பற்றி பயப்பட எதுவுமே இல்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *