LatestNews

மூன்று கொள்ளையர்களில் ஒருவரை தாக்கி கொலை செய்த பிரதேச வாசிகள்!!

கொழும்பின் புறநகர் பகுதியான முல்லேரியா மாளிகாகொடல்ல பிரதேசத்தில் வீடொன்றில் கொள்ளையிடச் சென்ற மூன்று கொள்ளையர்களில் ஒருவர், பிரதேசவாசிகள் தாக்கியதில் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி பொருட்களை கொள்ளையிட்டு கொண்டிருந்த போது, வீட்டார் சத்தமிடுவதை கேட்ட அயல் வீடுகளில் உள்ளவர்கள் அங்கு சென்று கொள்ளையர்களை பிடித்துள்ளனர்.

பிரதேசவாசிகளின் தாக்குதல் படுகாயமடைந்த கொள்ளையர்களில் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ஏனைய இரண்டு சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளனர். பிரதேசவாசிகளின் தாக்குதலில் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *