FEATURED

FEATUREDLatestNewsTOP STORIES

யாழில் கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் குளிக்கும் போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

திடீரென ஏற்பட்ட தீ விபத்து….. அதிவேக வீதியில் தீக்கிரையான பேருந்து!!

தெற்கு அதிவேக வீதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்து விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெலியத்த மாற்றுப்பாதைக்கு அருகில் உள்ள அதிவேக வீதியில் வைத்தே இந்த பேருந்து தீப்பற்றி எரிந்துள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அதிவேக வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக அதிவேக வீதி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   பேருந்து தீப்பிடித்து எரியத்தொடங்கியதை அடுத்து, பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேறியதனால், அதிஷ்டவசமாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழில் சாதனையாளர்களை சந்தித்த அதிபர் ரணில்!!

வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். யாழில் நேற்றையதினம்(07) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அதிபர் சாதித்தவர்களை சந்தித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் சாதித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பளுதூக்கல் வீரன் புசாந்தன், கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அக்செயா அனந்தசயனன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தரம் 05 புலமைப்பரிசில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

திருத்தங்கள் அடங்கிய முன்மொழிவுகள் அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருக்கும்….. அமைச்சர் கஞ்சன!!

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகள் மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான விடயங்களை அவர் x வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அத்தோடு,   அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்குங்கள்……………….!   மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வரைவு எதிர்காலத்தில் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது நிர்வாகத்தின் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வரி இலக்கத்தை பெறாதவர்களிடம் 50000 ரூபா அபராதம்….. நிதி இராஜாங்க அமைச்சர் அதிரடி!!

வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50000 ரூபா அபராதம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும் அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று(03/01/2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி எண் பெறுவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர், ‘நாட்டின் எதிர்காலத்தைப் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

A/L பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றமொன்று – மாணவர்கள் குழம்ப தேவையில்லை….. முளிமையான விபரங்களுடன் பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் செய்தி!!

2023 இற்கான உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து மாணவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது, இம் முறை புதிய பாடமாக கொரிய மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அட்டவணையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன இற்கான உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மாணவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது, Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மீளப்பெறுவதற்கு இனிமேல் சட்ட நடவடிக்கை….. இலங்கை வங்கிகள் சங்கம்!!

வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக கடனாளிகளிடமிருந்து கடன்களை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கையை (Parate Law) மேற்கொண்டு வருவதாக இலங்கை வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்கான இறுதித் தெரிவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது. வைப்புத்தொகையாளர்களின் பணத்தைப் பாதுகாக்க வங்கிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடனாளிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. இவ்விடையம் தொடர்பில் மேலும் அறிய கிடைத்தவை வருமாறு, வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

ஜப்பானில் வருடப்பிறப்பில் பாரிய நிலநடுக்கம் – 30+ மரணங்கள்….. இன்னும் ஓரிரு நாட்களில் பயங்கர நிலநடுக்கம் என எச்சரிக்கை!!

ஜப்பானில் நேற்று (01/01/2024) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 30 பேர் உயிரிழந்ததுடன் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 7.6 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததுடன் வீதிகள் பிளந்து கடுமையாக சேதம் அடைந்தன. அத்துடன், மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது தளர்த்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நேற்றைய புத்தாண்டு தினத்தில்(01/01/2024) இருந்து இன்று வரை அதிர்ந்து கொண்டே இருந்ததாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மொத்தமாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இன்று முதல் 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரி!!

நாட்டில் இதுவரையில் வரி விலக்களிக்கப்பட்டு வந்த 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இன்று (01/01/2024) முதல் VAT எனப்படும் பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வரை 138 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பெறுமதி சேர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுவந்தது. எவ்வாறாயினும், அரச வருமானத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய வற் திருத்தச் சட்டத்துக்கமைய, 15 வீதமாக இருந்த வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சிகரெட்டின் விலையும் அதிகரிப்பு!!

நாட்டில் இன்று (1) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5, 15, 20 மற்றும் 25 ரூபா ஆகிய விலைகளில் 4 பிரிவுகளின் கீழ் சிகரெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று முதல் நாட்டில் பெறுமதி சேர் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட்டமை நடைமுறைக்கு வருவதனாலேயே சிகரெட்டின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, Read More

Read More