வரலாற்றில் முதல் தடவை உச்சம் தொட்ட பேருந்து கட்டணம்!!

முதல் தடவையாக இலங்கையின் போக்குவரத்து வரலாற்றில் 4000 ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான பேருந்து பயணச்சீட்டு வழங்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கான சொகுசு பேருந்து கட்டணம் 4450.00 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

குறித்த கட்டண உயர்விற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்னர் இவ்வாறான கட்டண அதிகரிப்பு இடம் பெறவில்லை எனவும்,

இதன் காரணமாக போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

அதற்கு பதிலாக டீசல் கொடுப்பனவு ஒன்றை வழங்கி கட்டணத்தை குறைக்குமாறு சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்களும் உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *