சீனத்தடுப்பூசி பெற்றவர்களுக்கு சர்வதேசம் விடுத்த முக்கிய அறிவிப்பு!!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சைனோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட, வயது முதிர்ந்தவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவடைவதாக சர்வதேச ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அந்த வகையில்,

சைனோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 3 ஆம் தடுப்பூசியை விரைவாக செலுத்துமாறு தடுப்பூசி ஏற்றம் தொடர்பான விசேட ஆலோசனைக் குழு கோரிக்கையை விடுத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த அறிக்கை, இன்று அல்லது நாளை வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *