LatestNewsWorld

ஆஸ்திரியாவில் மீண்டும் அறிவிக்கப்பட்டது ஊடரங்கு!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஆஸ்திரிய அதிபர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதில் ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரியாவில் இதுவரை 4 அலைகளாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஐந்தாவது அலையும் உருவாகலாம் என அஞ்சப்படுகிறது.

எனவே, தடுப்பூசி போடாத மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று ஏற்படலாம் எனக் கருதப்படும் பகுதிகளில் உள்ளிருந்து வெளியே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என ஆஸ்திரிய பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு குறைந்தது 10 நாட்கள் நீடிக்கும் என்றும், அடுத்த ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *