LatestNews

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளியில் வெடிப்புச் சம்பவம்!!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட ஆட்டி வெட்டை எனும் பகுதியில் இன்று வெடிப்புச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று மாலை 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

ஆட்டி வெட்டையின் பின் காணியில் காணி துப்பரவு பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளை குப்பைக்கு தீ வைத்த போது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் எவருக்கும் எவ்வித சேதமும் இல்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *