மீண்டும் வலுவடைந்து நாளை ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ள “மிக்ஜாம்” சூறாவளி!!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த “மிக்ஜாம்“ சூறாவளி, தற்போது சென்னைக்கு கிழக்கே மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,
மிக்ஜாம் சூறாவளி மீண்டும் வலுவடைந்து நாளை (05/12/2023) வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக,
இலங்கையில் மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவாக பதிவாகும் என வளிமண்டவியல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை,
வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் சூறாவளி சென்னை அருகே நிலை கொண்டுள்ள காரணத்தால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
பல இடங்களில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதுடன்.
பலத்த காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரமும் தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.