2022 ஆம் கல்வியாண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறைக் காலம் அறிவிப்பு!!

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு “2022 ஆம் கல்வியாண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை” தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய,

எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதன்படி,

செப்டம்பர் 7ஆம் திகதி பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் 13 ஆம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை,

2022 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை மேமாதம் 20 ஆம் திகதி வழங்கப்பட்டது.

அதன்படி,

இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக ஜூன் மாதம் 06ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *