#Teachers

LatestNews

“பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்…..” – அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே!!

காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு பொது மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென்றும் பெற்றோரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் வேலைக்கு செல்லவும் வேண்டாமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Read More
LatestNews

ஹட்டனில் இன்று அதிபர், ஆசிரியர்கள் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி!!

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டிற்கான உரிய தீர்வை பெற்று தருமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஹட்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அதிபர் ஆசிரியர் ஒன்றிணைந்த சங்கத்தினால் இன்று பிற்பகல் 03 மணிக்கு அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமாகிய ஆர்பாட்ட பேரணிக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுட்டனர்.   மல்லியப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி பிரதான வீதியூடாக ஹட்டன் மணிக்கூண்டு வழியாக பிரதான பஸ்தரிப்பிடம் வரை வந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட Read More

Read More
LatestNews

அரசியல் நோக்கங்களை வைத்து போராடடம் மேற்கொண்டால் நாடு முடக்கப்படும்….. வசந்த யாபா பண்டாரா!!

நாட்டில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களை முன்னெடுத்தால் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என சிறிலங்கா பொதுசன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டாரா ( Vasantha Yapa Bandara) தெரிவித்துள்ளார். போராட்டங்கள் காரணமாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு நாட்டை முடக்கினால் பொருளாதார ரீதியில் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Read More
LatestNews

சாதாரண மற்றும் உயர்தர கல்வி செயற்பாட்டிற்காக பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் புதிய செய்தி!!

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் ங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். 10,11,12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு கொவிட்-19 தடுப்பு செயலணி பரிந்துரைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, 6 – 9 ஆம் தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது, பரீட்சை நடவடிக்கைகளை முன்னெடுப்பது உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு Read More

Read More
LatestNews

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் மற்றும் பல தனியார் பிரிவு தொழிற்சங்கங்களுடனும் இன்று பேச்சுவார்த்தை….. ஜோசப் ஸ்டாலின்!!

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களை இன்றைய தினம் சந்திக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் () தெரிவித்துள்ளார். அத்துடன், பல தனியார் பிரிவு தொழிற்சங்கங்களுடனும் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதன்போது, தங்களது வேதன பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பிரச்சினை தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மற்றும் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஆகியோருடன் முன்னெடுக்கப்பட்ட Read More

Read More
LatestNews

அரச மருத்துவ அதிகாரிகள் பாடசாலை சிற்றுண்டிச்சாலை தொடர்பில் வெளிவந்த சுற்றறிக்கை!!

பாடசாலை சிற்றுண்டிச்சாலை எவ்வாறு அமைய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதாக அறிவித்துள்ளது. எனினும், பல சிற்றுண்டிச்சாலைகள் அந்த சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுவதில்லையென வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது , மாணவர்களின் இணை பாடவிதான Read More

Read More
LatestNews

97% அதிபர்களும், 89% ஆசிரியர்களும், 45% மாணவர்களும் வருகை…… பேராசிரியர் கபில பெரேரா!!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1-5 வரை நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டதையடுத்து 97% அதிபர்களும் 89% ஆசிரியர்களும் கடமைக்கு சமுகமளித்திருந்ததாகவும் மாணவர்களின் வருகை 45% ஆக இருந்ததாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (K.Kapila C.K.Perera) தெரிவித்தார். அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணி தனது 106 நாள் வேலைநிறுத்தத்தை முடித்து நேற்று (25) பாடசாலைகளுக்கு சேவைகளுக்கு சமுகமளித்திருந்தனர். பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு படிப்படியாக அதிகரிக்குமென Read More

Read More
LatestNewsWorld

7வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது போல….. வீட்டுப்பாடம் கொடுப்பதையும் ரத்துசெய்ய புதிய சட்டம் வகுக்கவுள்ள சீனா!!

சீனாவில் ஏற்கனவே 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டிருந்ததைப் போலவே தற்போது வீட்டுப்பாடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை போல சீனாவிலும் பாடசாலை குழந்தைகளுக்கு இணைய வசதிகள்  மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் பாடசாலைகள் திறக்கப்பட்டது. ஆனாலும் வீட்டுப்பாடங்கள் அதிகம் கொடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், குறிப்பாக Read More

Read More
LatestNews

நீண்ட நாட்களுக்கு பின் நாடளாவிய ரீதியில் இன்று மீள ஆரம்பமானது 3,800 பாடசாலைகள்!!

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி இன்று முதல் பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardana) தெரிவித்தா் . நீண்ட காலங்களுக்குப் பின் இலட்சக்கணக்கான மாணவர்கள் பெரும் ஆவலுடன் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பரெனவும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலத்துக்குப் பின் தமது பிள்ளைகளின் மகிழ்ச்சியான முகத்தை நேரடியாக காண்பதற்காக அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பார்களென தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கல்வி என்பது பிள்ளைகளின் எதிர்காலமென்பதுடன் அது பிள்ளைகளின் வளர்ச்சிக்கான Read More

Read More
LatestNews

பாடசாலை சேவை வாகன கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்!!

பாடசாலை சேவைக் கட்டணத்தை அதிகரிப்பதற்க  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார். வாகன உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தமக்கான கட்டணத்தை அதிகரிக்கவில்லையென மேற்படி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More