#Student

LatestNews

பணி பகிஸ்கரிப்பில் குதித்த ஆசிரியர்கள்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒன்லைன் முறையில் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் ஆசிரியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட உள்ளனர். இந்த பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை முதல் நடத்தப்படுகிறது. அண்மையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றி போராட்டம் நடத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கவே மேற்படி பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNewsTOP STORIES

இணைய வழி கற்பித்தல்- ஆசிரியர் சங்கங்கள் இன்று முதல் எடுத்துள்ள தீர்மானம்!!

இணைய வழி மூலமான கற்பித்தலில் இருந்து இன்று முதல் விலகிக்கொள்வதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கங்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ள இணைய வழி ஊடான கற்பித்தல் புறக்கணிப்புக்கு அனைத்து கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்தத் தொழிற்சங்க போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச் Read More

Read More
LatestNews

முதலாம் ஆண்டிலிருந்து ஆங்கிலக் கல்வி முறையா? எதிர்க்கும் அமைச்சர் பந்துல!!

இலங்கை பிள்ளைகளுக்கு முதலாம் ஆண்டில் இருந்து ஆங்கில மூலம் கல்வியை வழங்கும் யோசனையை எதிர்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், இது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடாக இருக்கலாம் என நான் நினைக்கின்றேன். முன்னாள் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் என்ற வகையில் இலங்கை பிள்ளைகளுக்கு முதலாம் ஆண்டு முதல் ஆங்கில மொழியில் கல்வி கற்றுக்கொடுப்பதை தெளிவாக எதிர்க்கின்றேன். யுனிசெப் Read More

Read More
News

சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் தோற்றவுள்ள மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சர்!!

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லையென  கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டத்தை தொலைக்காட்சி சேவை ஊடாக முழுமைப்படுத்தவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனா தொற்று காரணமாக கல்வித் துறைக்கு பாரிய சவால் Read More

Read More
LatestNews

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளிவந்த புதிய செய்தி

மேல் மாகாணத்தில் மார்ச் 15ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகளை திறக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கல்வி அமைச்சு அனுமதி கோரியுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறுகையில், தரம் – 5, தரம் – 11, மற்றும் தரம் – 13ஐ முதற்கட்டமாகவும், ஏனைய வகுப்புக்களை கட்டம் கட்டமாக திறக்கவும் கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என அவர் கூறினார். பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கள் வழங்கிய அறிவுறுத்தல்களை கவனத்தில் Read More

Read More
LatestNews

6 பாடசாலைகள் திறக்கப்படமாட்டாது! வெளியான அறிவிப்பு

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நாளை 06 பாடசாலைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், காமினி தேசிய பாடசாலை, தமிழ் கத்தோலிக்கக் கலவன் பாடசாலை, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, சைவப்பிரகாசம் மற்றும் முஸ்லிம் மகா வித்தியாலயம் இவ்வாறு மூடப்படுகின்றதாக வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்தார். இந்த பாடசாலைகளை மீள திறக்கின்ற திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதேவேளை அம்பாறை நகரிலுள்ள பாடசாலைகள் Read More

Read More
LatestNews

பாடசாலைகளைத் திறக்கத் திட்டம்: இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டின் சில இடங்களைத் தவிர்த்து ஏனைய பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளைத் தவிர நாட்டின் ஏனைய பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது. குறித்த பாடசாலைகள் தரம் 6 முதல் 13ஆம் வகுப்பு மாணவர்களின் 3 ஆம் தவணை கற்றல் செயற்பாடுகளுக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மாணவர்கள் செயற்பட Read More

Read More
LatestNews

பாடசாலைகளை மீண்டும் தொடங்க தீர்மானம்! திகதி அறிவிக்கப்பட்டது – கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

பாடசாலைகளை மீண்டும் 23ஆம் திகதி திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, 6ஆம் ஆண்டு தொடக்கம் 13 ஆம் ஆண்டு வரையான வகுப்புக்களே இடம்பெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.    

Read More