#Sri lanka police

FEATUREDLatestNewsTOP STORIES

சுற்றுலா பயணிக்கு எரிபொருள் வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி….. காவல்துறை மா அதிபருக்கு கடிதம் மூலம் தனது அதிருப்தியை தெரிவித்த இலங்கை சுற்றுலாத்துறை !!

காலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காவல்துறை அதிகாரி எரிபொருள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நேற்றையதினம்(02/07/2022) மோட்டார் சைக்கிளில் சென்ற சுற்றுலா பயணி எரிபொருள் பெறமுயற்சித்த வேளை காவல்துறை அதிகாரி ஒருவர் அவரை தடுத்துள்ளார். இது தொடர்பான Twitter  பதிவை பார்வையிட பார்வையிட இங்கே சொடக்குங்கள்…………… இது தொடர்பாக வெளியான காணொலி காட்சியில் சுற்றுலாப் பயணிக்கு எரிபொருளை வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி எமது தேசிய கொள்கை சுகாதார Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாட்டில் 48 மணி நேரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவு!!

தெற்கின் அஹங்கம பிரதேசத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அஹங்கம, பஞ்சாலயவில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கொல்லப்பட்ட நபர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் தற்போது ஒரு வழக்கு தொடர்பாக பிணையில் இருப்பதாகவும்காவல்துறையினர் தெரிவித்தனர் . கடந்த 48 மணி நேரத்தில் பதிவான 3வது துப்பாக்கிச்சூடு, சம்பவம் இதுவாகும். பாணந்துறை நிர்மலா மாவத்தை பகுதியில் வைத்து 31 வயதுடைய நபர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று முன்தினம் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

காவல்துறை மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்….. பிரபல கொழும்பு ஊடகமொன்று செய்தி!!

காவல்துறை மா அதிபர்  ‘சீ.டி. விக்ரமரத்ன’ வை பதவி விலகுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் திகதி உறுப்பினர்கள் பலரது வீடுகள், சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதால் கூட்டம் ஆரம்பம் முதலே சூடான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அரச தலைவரை சுற்றிவளைத்து தமது துயரத்தை வெளிப்படுத்திய உறுப்பினர்கள் தமது சொத்துக்களை பாதுகாக்க தவறியதாக காவல்துறை மா Read More

Read More
LatestNewsSportsTOP STORIES

“நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது……” குமார் சங்ககார!!

ரம்புக்கனையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்து பலர்காயமடைந்த சம்பவத்திற்கு சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர் குமார் சங்ககார தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். குமார் சங்ககாரவின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக…….. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது. மன்னிக்க முடியாதது. மக்களின் உயிரைப் பாதுகாப்பது காவல்துறையின் முதல் பொறுப்பு. இது வெட்கக்கேடான கொடூர நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

Read More
LatestNewsTOP STORIES

கலவரக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூட்டு தாக்குதல்….. ஒருவர் மரணம் – கவலைக்கிடமான நிலையில் இருவர்!!

ரம்புக்கனையில் பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவத்தை பொலிஸ் பேச்சாளர் உறுதி செய்துள்ளார். பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி முற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது. காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவோரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்   தற்போது ரம்புக்கனை பகுதியில் விசேட அதிரடிப்படை பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More