#newstamil

FEATUREDLatestNews

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு : காவல்துறையினரின் நடவடிக்கையால் பரபரப்பு!

கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (12.04.2025) இரவு 12.35 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து காவல்துறையினர் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாகனமொன்றை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைவாக, மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் வாகனத்தை நிறுத்த முயன்ற போது சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனைத் Read More

Read More
FEATUREDLatestNews

வடக்கு மக்களுக்கு அநுர தரப்பு அளித்த உறுதி

வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) உறுதியளித்துள்ளார். காரைநகரில் நேற்று (11) நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு பிரதமர் மேலும் உரையாற்றியதாவது, “இந்த மண்ணில் பல திறமையானவர்களும் பண்டிதர்களும், கல்விமான்களும் தோற்றம் பெற்றார்கள். அவர்கள் பல்வேறு காரணங்களால் நாட்டை விட்டுச்சென்றுள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவார்கள் என நாம் நம்புகிறோம். ஆதற்கான சூழலை நாம் ஏற்படுத்திக்கொடுப்போம். Read More

Read More
FEATUREDLatestNews

குருநாகல் எரிபொருள் நிலைய தீ விபத்தில் நால்வர் பலி

குருநாகல் (Kurunegala) எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். குறித்த தீ விபத்து வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் நேற்று (07.04.2025) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. அத்துடன், இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை குருநாகல் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். மேலும், எரிபொருள் நிலையத்தில் உள்ள எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த தீ Read More

Read More
FEATUREDLatestNews

முற்றத்தில் விளையாடிய 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி

கம்பஹாவில் (Gampaha) வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் மாபாகே பகுதியில் நேற்று (06.04.2025) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கம்பஹா மாபாகே காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெலிசறை ஜேகொப் மாவத்தை பகுதியில் நேற்றையதினம் வேறு வீதியினூடாக வந்த கார் ஒன்று வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது மோதியுள்ளது. சம்பவத்தில் Read More

Read More
CINEMAFEATUREDLatest

‘ஜனநாயகன்’ குறித்து வெளியான புது அப்டேட்…

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் Read More

Read More
FEATUREDLatestNews

யாழ்ப்பாணத்தில் இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறமை

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு அவற்றின் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாகவும் துல்லியமாகவும் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த அசாதாரண திறமையை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யும் முயற்சியில் சிறுமியின் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். காலநிலை, விலங்குகள், மின்னணு சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட சொற்களை தமிழில் கேட்கும் போது, அவற்றுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கும் திறனை இச்சிறுமி வெளிப்படுத்தியுள்ளார். Read More

Read More
FEATUREDLatestNews

யாழில் நெல்லியடி காவல்துறையினர் செய்த சம்பவம்: தீயாய் பரவிய காணொளி – வெளியானது காரணம்!

யாழ்ப்பாணத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்று வீடொன்றின் கதவை நெல்லியடி காவல்துறையினர் எட்டி உதைப்பது போன்ற சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து இலங்கை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, நெல்லியடி துன்னாலை பகுதியில் ஒரு நபர் அங்கீகரிக்கப்படாத இறைச்சி கூடத்தை நடத்தி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, நெல்லியடி காவல்துறை திங்கட்கிழமை (மார்ச் 24) சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றபோது, வீட்டின் பின்னால் அமைக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத இறைச்சி Read More

Read More
FEATUREDLatestNews

பாடசாலை விடுமுறை: நடைமுறையாகும் புதிய தொடருந்து சேவை

மார்ச் மாத பாடசாலை விடுமுறை மற்றும் ஸ்ரீபாத யாத்திரை பருவத்தை முன்னிட்டு சிறப்பு தொடருந்து சேவை ஒன்றை இயக்க தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை வரை இந்த தொடருந்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதேவேளை, தொடர்புடைய பயணங்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 2024 (2025) சாதாரண தர பரீட்சை நேற்று நிறைவு பெற்றிருந்த நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் பாடாலை விடுமுறையும் Read More

Read More
CINEMAFEATUREDLatest

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார் – திரையுலகம் அதிர்ச்சி

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆவார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாஜ் மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். ஈஸ்வரன், மாநாடு மற்றும் விருமன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படத்தில் Read More

Read More
FEATUREDLatestNewsSports

மும்பைக்கு எதிராக ஐதராபாத் 300 ரன்களை குவிக்கும்.. டேல் ஸ்டெயின் கணிப்பு

ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அபாரமாக விளையாடிய இஷான் கிஷன் சதம் விளாசி அசத்தினார். அவர் மட்டுமல்லாமல் டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார், கிளாசன் ஆகியோரின் அதிரடியால் 20 Read More

Read More