#Government Staff

FEATUREDLatestNewsTOP STORIES

தேவையற்ற ஊழியர்களுக்கு சுய ஓய்வு….. அமைச்சரவை முடிவு அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அதிரடி அறிவிப்பு!!

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம்(31/01/2023) இடம்பெற்ற நிலையில் இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், ஒவ்வொரு நிறுவனத்திலும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வேலை இந்த நாட்களில் செய்யப்படுகிறது. தேவையற்ற ஊழியர்களுக்கு சுய ஓய்வு பெறும் முறையும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய அமைச்சுக்களின் செயலாளர்கள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கர்ப்பிணித் தாய்மார்கள் வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருக்கவும்….. அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம்!!

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலையை அடுத்து கர்ப்பிணித் தாய்மார்கள் வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவிக்கையில்,   தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலையில் உரிய நேரத்திற்கு அனுமதிக்க முடியாத நிலையில் வீட்டிலேயே பிரசவம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்தார். தற்போது நிலவும் சூழ்நிலையில் போக்குவரத்து சிரமங்கள் உள்ளதால் எந்த நேரத்திலும் பிரசவத்தை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இலத்திரனியல் சேவையாக மாற்றியமைக்கப்படவுள்ளது இலங்கையின் அரச சேவைகள்!!

இலங்கையின் அரச சேவையை இலத்திரனியல் சேவையாக மாற்றி அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் புதிய செயலாளராகப் பதவியேற்றுள்ள பிரியந்த மாயாதுன்னே இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடதாசி தாள் பாவனையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தின் சேவைகளை இலத்திரனியல் மயப்படுத்துவது அத்தியாவசியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதுடன், அத்தியாசியமில்லாத நாட்களில் அரச ஊழியர்கள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில் அரசிடமிருந்து முக்கிய அறிவிப்பு!!

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச உத்தியோகத்தர்களை மீள அழைக்கும் நடவடிக்கை இன்று(26/05/2022) முதல் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அவர்களின் சம்பளம் குறைக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அரச நிறுவனங்களின் ஊழியர்களை அழைப்பதற்கு தடை விதிக்கும் சுற்றறிக்கை நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. அத்துடன், அத்தியாவசிய சேவைகள் வழமை போன்று நடைபெறுவதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்விக்கவும்…. எ‌ரிபொரு‌ள் நெருக்கடியை சமாளிக்க இதுவே வழி – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்!!

இலங்கையில் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும், எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும் நாளை முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்கப்படுத்தப்படவுள்ளது.   நிறுவனத் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் இன்று முதல் பொதுத்துறை பணியாளர்கள் பணிபுரிய அழைக்கப்படுவார்கள் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.   எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும், எரிபொருள் நெருக்கடியை நிர்வகிக்கவும் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், p>அத்தியாவசியமற்ற ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சீனாவில் இருந்து வந்த பொருட்களை மறுத்து அனுப்பிய அதிகாரிகள்!!

சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்ட அரிசி, சர்க்கரை, பருப்பு போன்றவற்றை கொண்ட பொதிகள் தொடர்பில், வெளிநாட்டு சேவை அதிகாரிகள் சங்கம், தமது கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது. இந்த செயற்பாட்டுக்கு வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகேவினால் அங்கீகாரம் வழங்கியமையை சங்கம் கண்டித்துள்ளது. சீனத் தூதரகம் இந்த நிதியை சீன நட்புறவு சங்கத்திற்கு வழங்கியுள்ளது. இதனையடுத்து வெளிவிவகார அமைச்சின் நிர்வாக சேவையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகளை அறிந்துக்கொள்ள Read More

Read More
LatestNewsTOP STORIES

அரச சேவைகளின் செலவினங்களைக் கட்டுப்படுத்தி அடுத்த வழி பார்க்கும் அரசின் விசேட சுற்றறிக்கை!!

அரச சேவைகளின் செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். மகிந்த சிறிவர்தனவால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விசேட சுற்றறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சு, அரசின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் முறையையும் வலியுறுத்தியுள்ளது. திட்டச் செலவுகள், எரிபொருள் குறைப்பு, தகவல் தொடர்புச் செலவுகள், நலன்புரி மற்றும் நிவாரணச் செலவுகளை இடைநிறுத்துதல், அரச துறை ஆட்சேர்ப்பு போன்ற பல அரச சேவைச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் சிறப்பு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சுக்கள், மாகாண சபைகள், மாகாண சபைகளின் Read More

Read More
LatestNewsTOP STORIES

அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

சமூக ஊடகங்களின் வாயிலாக அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையானது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சந்தன தென்னகோனால் கடிதம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது அரச சேவையை அவதூறு செய்யும் வகையிலும், அரசின் கொள்கைகளை விமர்சிக்கவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டாம் என கண்டி மாவட்ட செயலகத்தின் கடிதத் தலைப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.ஜெயசிங்கவிற்கு “எச்சரிக்கை விடுத்தல்” எனும் தலைப்பில் கடிதம் ஒன்றை அவர் அனுப்பி வைத்துள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் Read More

Read More
LatestNewsTOP STORIES

புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் வழங்குவது சாத்தியமற்றது!!

நிதியமைச்சர், மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இதுவரையிலும் நியமிக்கப்படாததன் காரணத்தினால் புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் வழங்குவது சாத்தியமற்றது என்று சில தரப்பினர் நேற்றைய தினம் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் இம்மாதத்திற்கான சம்பளம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரச சேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மேலும் தெரிவிக்கையில், தமிழ், Read More

Read More
LatestNewsTOP STORIES

17 அரச தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசின் நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த கூட்டமைப்புக்கு சொந்தமான மற்றும் இணை சேவைகளில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் பல இணைந்து இன்று(10) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளன.   சம்பள கொள்கையை மீறி தெரிவுசெய்யப்பட்ட சேவைகளுக்கு மாத்திரம் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றமை, பதவி உயர்வு செயன்முறையில் காணப்படும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.   அரச சேவை பொறியியலாளர்கள் சங்கம், அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் சங்கம், உள்நாட்டு Read More

Read More