#Gas

FEATUREDLatestNews

எரிவாயு ஏற்றும் பாரவூர்திகளுக்கும் தீ வைப்பு….. கேகாலையில் சம்பவம்!!

கேகாலை – மாவனெல்லை பகுதியில் லிட்ரோ எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகள் நிறுத்தப்படும் முற்றத்திற்கும் அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர். குறித்த எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகள் மஹீபால ஹேரத் என்பவருக்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது. அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்களும் அடையாளம் தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளன.   இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாவனெல்லை தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் மற்றும் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை Read More

Read More
LatestNewsTOP STORIES

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விநியோகம் இனி இடம்பெறாது….. லிட்ரோ நிறுவம்!!

கையிருப்பு வரும் வரை வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விநியோகம் இனி இடம்பெறாது என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிவாயு இறக்குமதிக்காக 07 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று செலுத்தப்படவுள்ளது என லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு எரிவாயு தாங்கிய கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளது. இந்த நிலையில், விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் Read More

Read More
LatestNewsTOP STORIES

தாய்லாந்திலிருந்து 10 வீத கட்டண கழிவில் எரிவாயு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி….. ஆனாலும் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்கிறார் லிட்ரோ நிறுவன தலைவர்!!

தாய்லாந்திலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டிற்கு எரிவாயுவை வழங்குவதற்கு தாய்லாந்தின் சியம்(Siam) எரிவாயு நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், பொறியியலாளர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். விநியோகக் கட்டணத்தில் 10 வீத குறைந்த கட்டணத்துடன் எரிவாயுவை வழங்கவும் குறித்த நிறுவனம் இணங்கியுள்ளது. எவ்வாறாயினும், சமையல் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More
LatestNewsTOP STORIES

அத்தியாவசிய சேவைகளுக்கும் மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும்….. லிட்ரோ எரிவாயு நிறுவனம்!!

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீளும் வரை நகரங்களுக்கும், அத்தியாவசிய சேவைகளுக்கும் மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, இந்த முடிவால் தினசரி எரிவாயு விநியோகம் 60,000 முதல் 80,000 சிலிண்டர்களில் இருந்து 30,000 சிலிண்டர்கள் வரை குறைக்கப்படும் என்றும் 27 சதவீத எரிவாயு நுகர்வோர் மட்டுமே எரிவாயுவைப் பயன்படுத்துவர் என்றும் அவர் கூறினார். நாட்டின் மாதாந்த எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு 30 மில்லியன் Read More

Read More
LatestNewsTOP STORIES

எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கிறது!!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க கடந்த 15ஆம் திகதி தமது பதவியை Read More

Read More
LatestNewsTOP STORIES

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

தற்போது கையிருப்பில் உள்ள எரிவாயுத் தொகையை உணவகங்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய சேவை வழங்குனர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், உள்நாட்டு எரிவாயுக் கொள்கலன் விநியோகம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயு ஏற்றி வரும் கப்பல் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 3,600 மெற்றிக் தொன் உள்நாட்டு எரிவாயுவுடன் மேலும் Read More

Read More
LatestNewsTOP STORIES

3900 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் நாட்டிற்கு வந்தது கப்பல்!!

எரிவாயுவை நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்குமாறு அந்த நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் எரிவாயு நிறுவனத்தின் 1311 என்ற இலக்கத்தை அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று இரவு மாலைதீவில் இருந்து 3900 மெட்ரிக் டன் எரிவாயுவுடன் கப்பல் ஒன்று வருகை தந்துள்ளதாகவும் அதிலுள்ள எரிவாயுவை தரையிறக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதகாவும் தெரிவித்தார். இருப்பினும், நாட்டில் பல இடங்களில் எரிவாயுவை பெற Read More

Read More
LatestNewsTOP STORIES

மூன்று தின விநியோகத்திற்கு போதுமான எரிவாயு மாத்திரமே இருப்பில்!!

டொலர்களை வழங்கிய பின்னர் நேற்று 3 ஆயிரத்து 500 மெற்றி தொன் சமையல் எரிவாயும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகை சுமார் மூன்று தினங்களுக்கு மாத்திரமே போதுமானது என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. லிட்ரோ எரிவாயு நிறுவனம் சுமார் 200 மெற்றி தொன் எரிவாயுவை தொழிற்சாலைகளுக்கு வழங்குகிறது. மீதமுள்ள எரிவாயு 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.5 கிலோ கிராம் கொள்கலன்களில் அடைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ஒரு தொன் எரிவாயு மூலம் 12.5 கிலோ கிராம் Read More

Read More
LatestNewsTOP STORIES

எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் மீள ஆரம்பம்….. லிட்ரோ நிறுவனம்!!

சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாளொன்றுக்கு 120,000 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எரிவாயுவை தாங்கி வந்துள்ள கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் நேற்று முன்தினம் மாலை செலுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 3500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது நிலவும் Read More

Read More
FEATUREDLatestNews

எரிவாயு விநியோகம் தொடர்பி்ல் வெளியாகியுள்ள மகிழ்ச்சியான தகவல்!

நாட்டில் எரிவாயு விநியோகம் இன்று முதல் வழமைக்கு திரும்பும் என அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டிற்கு எரிவாயுவை ஏற்றி வந்துள்ள கப்பல்களுக்கான நிதி நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, எரிவாயுவைத் தரையிறக்கி, விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படும். எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படும் என ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை நேற்று முதல் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Read More

Read More