இன்று முதல் ‘சதொச’ நிறுவனத்திலும் விலைகள் அதிகரிப்பு!!

சதொச நிறுவனத்திலும் பொருட்களின் விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று  தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை அதிகரிப்புக்கு ஏற்ப சதொசவின் நாடளாவிய கிளைகளில் அததியாவசியப் பொருட்கள் விற்பனை தற்போது செய்யப்படுகின்றதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பொருட்கள் அத்துடன், முன்னரை விடவும் குறைந்தளவான பொருட்களையே சதொச தனது கிளைகள் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது. அதன் காரணமாக ஏராளம் Read More

Read more

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம்!!

இன்று முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த எரிபொருள் விநியோகத்திற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசாங்க அதிபர் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை இனம் கண்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக இந்த நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றார்.  

Read more

அத்தியாவசிய சேவைகள் நாளை வழமை போல் இயங்கும்….. நாங்கள் போராடடத்துக்கு ஆதரவளிக்க போவதில்லை!!

நாளை மே 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளதாக அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறுகிய அரசியல் ஆதாயங்களை அடைவதற்காக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். தங்களுடைய சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். நேற்று முன்தினம் (03/04/2022) மாலை கொழும்பு கோட்டையில் Read More

Read more

மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை அவசியம்….. GMOA!!

இலங்கையில் மருந்துகளுக்கான விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையினை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளின் விலை கட்டுப்படுத்தப்படாத நிலையில் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். மேலும், “விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை நடைமுறையில் உள்ளபோதும், சில பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படுவதில்லை. அவ்வாறு மருந்துகளின் விலை கட்டுப்படுத்தப்படாத நிலையில் Read More

Read more

பருப்பின் விலை 1,000 ரூபா….. மேலும் அதிகரிக்கும் விலைவாசி!!

நாட்டில் கடந்த சில நாட்களாக விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், எதிர்வரும் மே மாதத்திற்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதிலும், விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்படுகின்றமையால் மக்கள் தற்போது பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் தற்போது நாட்டில் ஒரு Read More

Read more

இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளது….. புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள்!!

எதிர்வரும் தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பில் இலங்கையில் மீண்டும் விலை அதிகரிப்புகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களில் ஒன்று கோதுமை மா விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் தற்போதைய விலை 210 தொடக்கம் 220 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை கோதுமை மாவிற்கான Read More

Read more

சந்தைகளில் சகல ரக அரிசிகளின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட நாள் முதல் வர்த்தகர்கள் விரும்பியவாறு அரிசிகளின் விலைகளை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே ரஞ்சித் (P.K Ranjith) தெரிவித்துள்ளார். அதேவேளை வடக்கு, வடமத்திய மாகாணங்களிலிருந்து நெல் அறுவடை Read More

Read more

48 மணி நேரத்துக்குள் நிவாரணப் பொதியைப் பெற்றுக் கொள்ளலாம்!!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில், சில அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் மற்றும் அரிசிக்கு அதிக விலையை விதித்து அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். அதேவேளை, எந்தவொரு தனிநபரும் 1998 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு 48 மணி நேரத்துக்குள் நிவாரணப் பொதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே Read More

Read more

நிவாரண விலையில் மாதாந்தம் 15kg 1kg கோதுமை மா 80 ரூபா வீதம்!!

பெருந்தோட்டத் துறை சார்ந்த குடும்பங்களுக்கு 1kg கோதுமை மா 80 ரூபா வீதம் நிவாரண விலையில் மாதாந்தம் 15kg வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அறிவித்துள்ளார். அதேபோன்று, ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 75 ரூபாவை விவசாயிகளுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 பேர்சர்ஸ்க்கு குறைவான விவசாய நிலங்களை கொண்டுள்ள விவசாயிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திடீர் சலுகை திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 1000 கொள்கலன்களில் உருளைக்கிழங்கு, பருப்பு, வெங்காயம், சீனி, நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கி கிடப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ளதுறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இதுவும் காரணமாக அமைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksha)தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய அமைச்சரவைக் Read More

Read more