#Diesel

FEATUREDLatestNewsTOP STORIES

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு….. மீண்டும் அதிகரிக்கும் நிலையில் எரிபொருள் விலை !!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலைவரப்படி ஒரு பரல் கச்சா எண்ணெய் விலை 124 டொலர்களை தாண்டியது. கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. எவ்வாறாயினும், உலக சந்தையின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப உள்நாட்டுச் சந்தையிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என துறைக்குப் பொறுப்பான அமைச்சு அறிவித்துள்ளதால் இந்த மாதம் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

13,200 லீற்றர் எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கி தடம்புரண்டது!!

கொழும்பிலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி ஒன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விபத்து ஏற்படும் போது தாங்கியில் 13,200 லீற்றர் பெட்ரோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இதன்போது கசிந்து வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் குருநாகல் தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புப் பிரிவினரின் பெரும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

3500 mt எரிவாயு தாங்கி நாட்டுக்கு வந்த கப்பல், எரிபொருள் இன்றி நடுக்கடலில்!!

இலங்கைக்கு வந்தடையவிருந்த 3 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கப்ல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்தது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலுக்கு தேவையான எரிபொருளை இலங்கையில் வழங்க முடியாமையால், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, குறித்த எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைய மேலும் இரண்டு நாட்களாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாடாளாவியரீதியில் மூடப்பட்டன நாற்பது எரிபொருள் நிலையங்கள்!!

வாடிக்கையாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நாற்பது எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் நிலைய ஊழியர்களை அச்சுறுத்தி எரிபொருள் பெற்றுக் கொள்ள முயற்சித்தல் மற்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை போன்ற காரணங்களை முன்னிட்டே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் கொள்வனவு செய்வதற்காக விடுக்கப்பட்ட எரிபொருள் கேள்வியும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்திருப்பதாகவும் எரிபொருள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இன்று நள்ளிரவில் இருந்து எ‌ரிபொரு‌ள் விலை உயர்வு!!

இன்று 23.05.2022 இரவு 12.00 மணிக்கு இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் அனைத்து வகையான எரிபொருட்களுக்கும் விலை அதிகரிக்கவுள்ளதாக அறிய முடிகிறது.. 24.05.2022 நாளை செவ்வாய்க்கிழமையில் இருந்து புதிய விலைகள்.. 92 ஒக்டேன் ரக பெற்றோல் 420.00 95 ஒக்டேன் ரக பெற்றோல் 450.00 ஓட்டோ டீசல் 400.00 சுப்பர் டீசல் 445.00 மண்ணெண்ணெய் விலை விபரம் கிடைக்கப்பெறவில்லை.. இருப்பினும் இதுவரையில் இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஆறு வாரங்களுக்கு போதுமான பெட்ரோல் கையிருப்பில்….. வலுசக்தி அமைச்சர்!!

95 ஒக்டென் பெட்ரோல் நாளை முதல் நாடு முழுவதும் பெற்றுக் கொள்ள முடியும் என்று வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். இரண்டு கப்பல்களில் இருந்து தரையிறக்கப்பட்டுள்ள 95 ஒக்டென் பெட்ரோல் இன்று முதல் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஆறு வாரங்களுக்கு போதுமான 95 ஒக்டென் பெட்ரோல் கையிருப்பில் இருக்கிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். நாளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 95 ஒக்டென் பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

எரிபொருள் விநியோக இடைநிறுத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவது தொடர்பிலான அறிவிப்பொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்களால் வீதிகள் தடைப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எரிசக்தி அமைச்சில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொள்கை ரீதியில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக எரிபொருள் விநியோகிக்கும் தாங்கிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தகவல் வௌியாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ‘Lanka IOC’ வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றுக்கான எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தானத்தின் விதிகள், ஒழுங்குமுறைகளை மீறியதால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பதுக்கி வைப்பதாகவும், வாகனங்களுக்கான எரிபொருள் அளவு உத்தரவை சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீறுவதாக முறைபாடு கிடைத்துள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, மாகொல தெற்கு, நால்ல, களனியின் பேத்தியகொட, மீரிகம ஆகிய இடங்களிலுள்ள 4 எரிபொருள் நிலையங்களுக்கான விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும்….. Lanka IOC தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்!!

மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ‘ஆனந்த பாலித’ தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன்று விநியோகிக்கப்படும் எரிபொருளானது தரமற்றது எனவும் அவர் கூறியுள்ளார். ஐஓசி நிறுவனம் எரிபொருள் தர ஆய்வுகளை நடத்தவில்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை, பெட்ரோல் விநியோகம் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாட்டில் பெரும் பெற்றோல் தட்டுப்பாடு….. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!!

பெற்றோல் பற்றாக்குறை காரணமாக நாட்டில் பெரும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இன்று முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டாலும், மீண்டும் பெற்றோல் கப்பல் கொள்வனவு செய்யப்படும் வரை போதியளவு பெற்றோல் கிடைக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் பல நாட்களாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள பெற்றோல் கப்பலை விடுவிக்க முடியாமல் போனதே பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கடுமையான டீசல் தட்டுப்பாடு நிலவுகின்ற Read More

Read More