40,000 mt டீசலுடன் இன்று நாட்டை வந்தடையவுள்ளது கப்பலொன்று!!

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் கடனுதவியின் கீழ் இந்த எரிபொருள் இலங்கைக்கு வரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார். இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Read more

விலையேற்றத்துடன் தளர்த்தப்பட்டன எரிபொருள் விநியோகத்திற்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும்!!

எரிபொருளை விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானம் எடுத்துள்ளது. இதன்படி, வாகனங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடிப்படையிலான உச்ச அளவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் இதனை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், டீசல், பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டதோடு, எரிவாயு இன்மையால் மக்கள் தொடர்ந்தும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது Read More

Read more

நள்ளிரவு முதல் பாரியளவில் அதிகரிக்கப்பட்டது எரிபொருள் விலைகள்!!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ளது.   லங்கா ஐ.ஓ.சி நிறுவனமே இந்த எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.   இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பு விபரம் வருமாறு, • பெட்ரோல் 92 – ரூ.338 • Read More

Read more

மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் அதிகரிப்பு….. மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை!!

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மூன்று அமெரிக்க டொலரால் அதிகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் இன்றைய விலை 111.37 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டீ.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.24 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது எரிபொருள் சுத்திகரிப்பிற்காக பயன்படும் மசகு எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது.

Read more

எரிபொருட்களின் புதிய விலை மற்றும் விபரங்கள்!!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 77 ரூபாவாலும் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 76 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் டீசலின் விலை 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்புக்கு அமைய ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 254 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 283 Read More

Read more

அதிகரிக்கும் ஆட்டோ கட்டணம்!!

நாட்டில் நள்ளிரவு தொடக்கம் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து முச்சக்கர வண்டிகளின் போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேன (Lalith Dharmasena) தெரிவித்துள்ளார். அதன்படி முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை அதிகபட்சமாக 80 ரூபாவினாலும் இரண்டாவது கிலோமீற்றரில் இருந்து அறவிடும் கட்டணத்தை 45 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானித்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் போக்குவரத்துச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Read more

பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்….. கெமுணு விஜேரத்ன!!

எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன (Kemunu Wijeratne) கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி, ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணமாக 25 ரூபாவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆகக்குறைந்தது 20 வீதத்திலாவது பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்ஜன பிரியஞ்ஜித் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு Read More

Read more

மீண்டும் நள்ளிரவு முதல் அத்திகாரிக்கப்பட்டது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்!!

நள்ளிரவிலிருந்து லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 157 ரூபாவாக இருந்த 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை லீற்றர் ஒன்றின் விலை 177 ரூபாவாகும். அத்துடன், எக்ஸ்ட்ரா பிரிமியம் 95 லீற்றர் பெற்றோலின் புதிய விலை 210 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 121 ரூபாவாகும். சுப்பர் டீசல் Read More

Read more