#Corona

LatestNewsTOP STORIES

எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோம் என நீங்களே முடிவெடுக்க வேண்டாம்….. டொக்டர் ஹேமந்த ஹேரத்!!

48 மணித்தியாலங்களுக்கு மேலாக காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்(Hemantha Herath) இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். ஒமிக்ரோன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியவை சமூகத்தில் பரவுவதை அவதானித்த நிலையிலேயே மேற்கண்ட அறிவுறுத்தலை  விடுப்பதாக தெரிவித்தார். மக்கள் தாங்கள் எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தாங்களாகவே முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ சிகிச்சையை பெறலாமா வேண்டாமா என்று Read More

Read More
LatestNewsTOP STORIES

கிடைத்தது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கான அங்கீகாரம்!!

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார். மேலும், கொள்கை முடிவுகளின் அடிப்படையில் இந்த அட்டை கட்டாயமாக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், எந்த இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம் என்பதை அமைச்சு எதிர்காலத்தில் முடிவு செய்யும். கையடக்கத் தொலைபேசி விண்ணப்பம் மற்றும் முழுமையான தடுப்பூசி நிலைக்கான QR குறியீடு என்பன 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் Read More

Read More
LatestNewsTOP STORIES

நேற்றைய தினம் மட்டும் நாட்டில் 30 கொவிட் மரணங்கள்!!

இலங்கையில் மேலும் 30 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்(14) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.   நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,874 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 304 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,3649 ஆக அதிகரித்துள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

நாடாளுமன்றத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

நாடாளுமன்றத்தில் சில பிரிவுகளின் மூன்று பிரதானிகள் உட்பட மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று நேற்று (14) உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை, 112 பணியாட் தொகுதியினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   கொரோனா தொற்றுக்குள்ளான 28 பேரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த சில வாரங்களில் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளான பணியாட் தொகுதியினரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இதுவரை 49 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா Read More

Read More
LatestNewsWorld

ஜப்பான் நாட்டின் இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதி!!

ஜப்பான் நாட்டின் இளவரசி யோகோவிற்கு (Yoko) கொரோனா நோய் பாதிப்பு சற்று தீவிரமாக இருப்பதால், தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 38 வயதான அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக, காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த Yoko-விற்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. Read More

Read More
LatestNewsTOP STORIES

பொதுப்போக்குவரத்துக்களில் கட்டாயமாக்கப்படும் தடுப்பூசி அட்டைகள்….. அமைச்சர் திலும் அமுனுகம!!

தடுப்பூசி அட்டைகள் பொதுப்போக்குவரத்துக்களின் போது கட்டாயமாக்கப்படும் என்று  ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், மூன்று தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என்று சுகாதார பிரிவினர் அறிவித்தால், அதன்படி, போக்குவரத்துறையில், நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சு இந்த விடயத்தில் முடிவெடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் மாத்திரமே போக்குவரத்து பேருந்துக்களில் பயணிக்கமுடியும் என்று அந்த அமைச்சு கூறினால், அதனை போக்குவரத்து அமைச்சு நடைமுறைப்படுத்தும் என்றும் திலும் அமுனுகம Read More

Read More
LatestNewsTOP STORIES

கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்காக அதிவிசேட வர்த்தமானி!!

கொரோனா தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை சுகாதார அமைச்சரினால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது. சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களில் கொரோனா தொற்றுக் குறைவடைந்திருந்த நிலையில், மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

கர்ப்பிணித் தாய்மார்கள் இயலுமானவரை விரைவாக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 500 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா (Dr. Chitramali de Silva) தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். சன நெரிசல் அதிகமுள்ள இடங்கள் மற்றும் அநாவசியமான பயணங்களைத் தவிர்க்குமாறு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வைத்தியர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Read More
LatestNewsTOP STORIESWorld

குடிமக்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசியை பெறுவதை கட்டாயமாக்கிய ஐரோப்பிய நாடு!!

ஒஸ்ரியா நாட்டின்  பிரஜைகள் அனைவரும் கொவிட் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது கட்டாயம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாடுகள் ஏற்கனவே முதியவர்கள் அல்லது சுகாதார ஊழியர்கள் கொவிட் தடுப்பூயை பெற்றுக்கொள்வது கட்டாயம் என அறிவித்துள்ளன. எனினும், எந்த ஐரோப்பிய நாடும் தமது நாட்டுக்கு குடிமக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது கட்டாயம் என்ற சட்டத்தை கொண்டு வரவில்லை.   இந்நிலையிலேயே, ஒஸ்ரியாவில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்,v Read More

Read More
LatestNewsTOP STORIES

88 மாதிரிகளில், 82 ஒமைக்ரோன் மற்றும் 6 டெல்டா தொற்றாளர்கள் இனங்காப்பு….. அபாய வலையமாகும் இலங்கை!!

நாட்டில் 82 புதிய ஒமைக்ரோன் தொற்றாளர்ளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர(Chandima Jeewandara) தெரிவித்துள்ளார். 88 மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் 82 ஒமைக்ரோன் தொற்றாளர்களும் 6 டெல்டா வைரஸ் தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபை, கொழும்பு, கொஸ்பேவ, மத்துகம, ஆகிய பகுதிகளில் ஒமைக்ரோன் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காப்பட்டுள்ளதாக சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கொழும்பு தேசிய Read More

Read More