#Corona

LatestNews

கொரோனா அபாயம்- மூடப்பட்டது மாநகர சபை!!

நீர்கொழும்பு மாநகர சபையின் ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று வியாழக்கிழமை முதல் நான்கு தினங்களுக்கு நீர்கொழும்பு மாநகர சபை மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகர சபைக்கு வந்து பொதுமக்கள் சேவையை பெற்றுக் கொள்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பொதுசுகாதார பிரிவில் கொரோனா தொற்றாளர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNewsWorld

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு மீண்டும் திருத்தி வெளியான அறிவித்தல்!!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் மக்களுக்கான தனிமைப்படுத்தல் முறையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மீண்டும் திருத்தியமைத்துள்ளார். அதன்படி, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன் வெளியுறவு அமைச்சு அல்லது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் அனுமதி பெற தேவையில்லை. எனினும், அத்தகையவர்கள் அனைவரும் நாட்டிற்கு வந்தவுடன் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான சுற்றறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNews

“உடனடியாக நாட்டை முடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” முக்கிய தரப்பில் இருந்து அறிவுப்பு!!

கொரோனாவின் “டெல்டா” திரிபு நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருவதால், நாட்டை மூடிவிட்டு, இந்த பேரழிவு தரும் தொற்றுநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் அரசாங்கத்திற்கு ஒரு வலுவான கோரிக்கையை விடுக்கின்றனர். நாடு முழுவதும் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பயணக் கட்டுப்பாடுகளை மட்டும் விதிப்பதன் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியாது. ஒரு சில கட்டுப்பாடுகள் Read More

Read More
LatestNews

இலங்கை எட்டிய மைல்கல்! தொடரும் அடுத்த முயற்சி!!

கொவிட் -19 தடுப்பூசி இயக்கத்தில் இலங்கை 11 மில்லியன் மைல்கல்லை எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இலங்கையில் இதுவரை 11 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு (11,081,092) கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் 96% க்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் கொவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸினைப் பெற்றுள்ளனர் அதேநேரம் 30 வயதுக்கு மேற்பட்ட நாட்டின் மக்கள் தொகையில் 26% க்கும் அதிகமானோர் கொவிட் -19 Read More

Read More
LatestNews

இராணுவத் தளபதி சற்று முன்னர் வெளியிட்ட அறிவிப்பு!!

நாடு முழுவதிலும் இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு வருகின்றது. இதன்படி மாகாணம் விட்டு மாகாணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் தீவிரமான கண்காணிப்பு இன்றிலிருந்து மேற்கொள்ளப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். குறிப்பாக அத்தியாவசிய தேவை மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு கடமைகளுக்கு செல்வோருக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படும். அத்துடன், திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரமே பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை 150ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. Read More

Read More
LatestNews

அதிகரிக்கும் கொரோனா – முக்கிய அரச நிறுவனமொன்று வெளியிட்ட அறிவிப்பு!!

தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களின் சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே தபால் நிலையங்கள் மற்றும் உப அஞ்சலகங்கள் திறந்திருக்கும். தற்போதைய கொவிட் -19 தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும், ஈஎம்எஸ் மத்திய அஞ்சல் பரிமாற்றத்தால் நிகழ்த்தப்படும் சர்வதேச கூரியர் சேவை, ஸ்பீட் போஸ்ட் சேவை, வெளிநாட்டு பொதிகள் சேவை மற்றும் ஸ்டாம்ப் சீலிங் மெஷின் பிரிவு Read More

Read More
LatestNews

அடுத்த இரண்டு வாரங்கள் என்ன செய்தாலும் கொவிட் மரணங்கள் அதிகரிக்கும் – பொது சுகாதார பரிசோதகர்கள்!!

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள் என்ன செய்தாலும் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களில் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நோயாளிகள் அதிகரிப்பதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். அடுத்த 14 நாட்களுக்கு இந்த நிலைமையை கட்டுப்படுத்த நாம் என்ன செய்தாலும் நோயாளிகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை மிக சடுதியாக அதிகரிக்கும். இதனை சுகாதார கட்டமைப்பால் தாங்க Read More

Read More
LatestNews

நாட்டை முடக்குவது தொடர்பில் வெளிவரவுள்ள முக்கிய அறிவித்தல்??

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதன் பின்னர் நாட்டை முடக்குவது அல்லது பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது இன்றோ அல்லது நாளையோ சாத்தியமாகலாம் என்று தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நூறிற்கும் அதிகமாகவுள்ளதை சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில், அடுத்த சில வாரங்களில் பெரும் நெருக்கடி நிலையினை எதிர் கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளார்கள். இதனையடுத்து Read More

Read More
LatestNews

நான்கு வாரங்களுக்கு முடக்கப்படுமா இலங்கை??

அதிவேகமாக பரவிவரும் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு, சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தல் மற்றும் நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்தல் ஆகியன, சுகாதார கட்டமைப்பினால் சமாளிக்க முடியாது என சுகாதார தரப்பு கூறியுள்ளது. அதனால், நாட்டை 4 வாரங்களுக்கு முடக்குவது அத்தியாவசியமானது என அரசாங்கத்திடம் சுகாதார தரப்பு குறிப்பிட்டுள்ளது. நாளாந்தம் 3000தை அண்மித்த தொற்றாளர்களும், Read More

Read More
LatestNews

இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு! அரசாங்கம் அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும். சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமை, வீடுகளிலிருந்து வெளியேறுதல் ஆகியன Read More

Read More