#CEB

LatestNewsTOP STORIES

இன்று மின்வெட்டு தொடர்பில் CEB வெளியிட்டுள்ள தகவல்!!

இன்று மின்சாரத்தை விநியோகிப்பதில் தடை ஏற்படக்கூடும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்முனையங்களுக்கு அவசியமான எரிபொருள் கிடைக்காவிட்டால், இன்றைய தினமும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. சனிக்கிழமை என்பதால், இன்று மின்சாரத்திற்கான கேள்வி குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மின்னுற்பத்திக்கு அவசியமான எரிபொருள் இன்மையால், கொலன்னாவ, களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையங்களின் இரண்டு மின்முனையங்களும், மத்துகம மற்றும் துல்ஹிரிய ஆகிய மின்னுற்பத்தி நிலையங்களும் செயலிழந்துள்ளன. இவ்வாறான பின்னணியில், இரண்டு கட்டங்களாக, Read More

Read More
LatestNewsTOP STORIES

இன்று நாடுமுழுவதும் ஒரு மணிநேர மின் வெட்டு!

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க ( Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். அதன்படி, பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்த நேர அளவு நாளாந்த நிலைமையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Read More
LatestNewsTOP STORIES

புதிய விதிமுறைகளுடன் மூன்று மாதங்களுக்கு மின் வெட்டு இனி இல்லை என அறிவிப்பு வெளியிட்ட பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!!

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்படும் புதிய விதிமுறைகளின் கீழ் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கான அவசியம் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். இதற்கான புதிய வழிமுறைகளை அமுல்படுத்துவதாக இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, பாரிய அளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள், தினமும் 4 மணித்தியாலங்கள் தங்களிடமுள்ள மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி , மின்சார தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். தொடர்மாடி குடியிருப்புகளில் வசிப்போர் மாலை Read More

Read More
LatestNewsTOP STORIES

மின்தடை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!!

மின்சாரத்தை தடையின்றி பெறுவதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை  வரை மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read More
LatestNewsTOP STORIES

வரும் திங்கட்கிழமை முதல் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மின்வெட்டு!!

தற்போதைய மின் நெருக்கடி உண்மையான மின் நெருக்கடியல்ல எனவும் எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபையை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான திட்டமிட்ட முயற்சியே இது எனவும் ஐக்கிய தொழிற்சங்கப் படையின் அழைப்பாளர் ஆனந்த பாலித (Ananda Palitha)தெரிவித்துள்ளார். எரிபொருள் இருப்புக்களை முறையாக பராமரிக்காததாலும், 70% நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாலும் மின் நெருக்கடி ஏற்பட்டதாக அவர் கூறினார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் பழுதடைந்து,   வருடாந்த உற்பத்தி சுழற்சியைப் பொருட்படுத்தாமல் நீர் Read More

Read More
LatestNewsTOP STORIES

நாட்டில் எகிறவுள்ளது மின் கட்டணங்களும்!!

நாட்டில் கட்டாயம்  மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கான செலவுகள் தற்போது அதிகரித்துள்ளதாலும் மின்சார சபை நீண்டகாலமாக நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் மின்சார கட்டணங்களை அதிகரித்தாக வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றாலும் மக்கள் மின் உபகரண பயன்படுத்தல்களை குறைத்து, மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க உதவ வேண்டும் என கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த கோரிக்கைக்கு Read More

Read More
LatestNewsTOP STORIES

களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலைய இரு மின்பிறப்பாக்கிகளும் செயலிழப்பு!!

களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள இரண்டு மின்பிறப்பாக்கிகளும் எரிபொருள் இன்மையால் நேற்றிரவு முதல் செயலிழந்துள்ளன. களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கியில் இருந்து 115 மெகாவொட் மின்சாரமும் மற்றுமொரு மின்பிறப்பாக்கியில் இருந்து 165 மெகாவொட் மின்சாரமும் தேசிய மின்கட்டமைப்புக்கு விநியோகிக்கப்படுகின்றது. தேசிய மின்கட்டமைப்புக்கு 130 மெகாவொட் மின்சாரத்தை விநியோகிக்கும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின், ஒரு முனையத்தின் திருத்தப் பணிகள் இன்றைய தினத்துக்குள் நிறைவு செய்யப்படவுள்ளன. இதுதவிர, எரிபொருள் இன்மையால் செயலிழந்திருந்த சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு Read More

Read More
LatestNewsTOP STORIES

நுரைச்சோலை அனல் மின் நிலையம் மீண்டும் செயலிழப்பு!!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி மீண்டும் பழுதடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி முதல் செயலிழந்திருந்த குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு, நேற்றைய தினம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றைய தினம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேற்படி மின் பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனால் தேசிய மின் கட்டமைப்பில் 270 மெகாவோட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் Read More

Read More
LatestNews

நாட்டில் ஜனவரி இறுதிக்குள் மின்சார பிரச்சனைக்கு தீர்வு!!

இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு மசகு எண்ணெய் கையிருப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை மீண்டும் ஜனவரி 27ஆம் திகதி பரிசீலிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது எனினும், இந்த 3 நாட்களில் மின்சாரம் தயாரிக்க Read More

Read More
LatestNewsTOP STORIES

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அவசியம் இல்லை….. காமினி லொக்குகே!!

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கான அவசியம் இல்லை என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள் உள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின் பிறப்பாக்கியை எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் சீர்செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வௌியிட்டார். அதன் பின்னரும் தொடர்சியான மின்சார விநியோகத்தை வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி அமைச்சர் கூறினார். களனிதிஸ்ஸ, Read More

Read More