உடன் அமுலாவும் வகையில் அதிகரிக்கப்பட்ட்ன விலைகள்!!

உடன் அமுலாவும் வகையில் பேக்கரி உற்பத்தி பொருட்கள் விலை அதிகரிக்கப்படவுள்ளது.   இதன்படி, 10 வீதத்தினால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர் மீண்டும் இந்த விலையேற்றம் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read more

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!!

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று (26/06/2022) முதல், சிறிய உணவுகள், கொத்து மற்றும் உணவுப் பொதிகளின் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர் மீண்டும் இந்த விலையேற்றம் இடம்பெற்றுள்ளது.

Read more

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

இன்று (19/05/2022) நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், ஒரு இறாத்தல் பாணின் விலை 170 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. நுகர்வோரையும் பேக்கரி உரிமையாளர்களையும் பாதிக்காத வகையில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சிற்றுண்டிகளுக்கான விலைகளை நாளை காலை முதல் 10 ரூபாவால் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக Read More

Read more

இன்றிரவு முதல் அதிகரிக்கிறது பாண் மறறும் இதர வெதுப்பக பொருட்களின் விலைகள்!!

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30/=  ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.   இன்று (19/04/2022) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   மேலும், 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30/- ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இதர வெதுப்பக பொருட்களின் விலைகள் 10/-.ரூபாவாலும் அதிகரிக்கின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது 10/= Read More

Read more

யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினரின் அதிரடி அறிவிப்பு!!

யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று யாழ்ப்பாணத்தில் பிறீமா மா விற்பனை முகவர்களுடன் கலந்துரையாடல்  இடம்பெற்றது. அதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், பிறீமா விற்பனை முகவர்கள் யாழில் பேக்கறி உற்பத்தி விநியோகத்திற்கான மாவின் அளவை குறைப்பதாக தெரிவித்திருந்தார்கள். எனினும், எமக்கு வழங்கப்படும் மாவின் அளவினை குறைக்க வேண்டாம் என்று கோரியிருந்தோம். எதிர்வரும் காலங்களில் Read More

Read more

400 ரூபாவாகும் பாணின் விலை….. பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்தன!!

இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன (NK Jayawardena) தெரிவித்துள்ளார். மேலும் கருத்தத் தெரிவித்த அவர், நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுகிறது. அதனால், பேக்கரித் தொழில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன் காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, பேக்கரி உரிமையாளர்கள் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. .   இன்று Read More

Read more

பாணுக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுக்கொண்டே செல்கிறது….. அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்!!

எதிர்காலத்தில் பாணுக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன (NK.Jayawardena) தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் பாணுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம். நாங்கள் நேற்று கோதுமை மா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். போதுமான அளவுக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யலாம், டொலர் இல்லாததே பிரச்சினை. அவர்களுக்கு இறக்குமதி செய்ய தேவையான டொலர்களில் 10 Read More

Read more

இன்று நள்ளிரவு முதல் விலையேற்றம்!!

இன்று நள்ளிரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பேக்கரி உற்பத்திபொருட்களை கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்ய பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க உரிமையாளர்களுக்கு முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இனிவரும் காலங்களில் பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களும் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் என அந்த சங்கம் கூறுகின்றது. இன்றிரவு  முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை Read More

Read more