தனது வேட்புமனுவை மீள பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த “சஜித்”!!
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய அதிபருக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று(19/07/2022) நடைபெறவிருந்த நிலையில் சஜித் பிரேமதாஸ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாஸ அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக…..
“நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், மக்களின் நலனுக்காகவும் நான் அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் திரும்பப் பெறுகிறேன்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர் டலஸ் அழகபெருமவை வெற்றி பெற கடுமையாக உழைப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.