LatestNews

பாடசாலைகள் மீண்டும் எப்போது திறக்கப்படும்? கல்வி அமைச்சர் பதில்!!!!

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதால் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான உறுதியான திகதியை கூற முடியாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, இணையத்தின் மூலமான கல்வியை மேலும் சிறிது காலம் தொடர வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் இதை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக, பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் பல்வேறு காரணங்களால் இணைய வசதியை பெற முடியாத மாணவர்களுக்கு ‘பிராந்திய கற்றல் மையங்கள்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

“இ தக்ஸலாவா” போன்ற ஊடகங்கள் மற்றும் வானொலி மூலம் குழந்தைகளுக்கு கல்வி வசதிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *