FEATUREDLatestNewsTOP STORIES

19,800 லீற்றர் பெட்ரோலை ஏற்றிச் சென்ற பெட்ரோல் தங்கி….. எரிபொருளின்றி 10 மணிநேரம் நடு வீதியில்!!

முத்துராஜவெல எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து புத்தளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு

பெட்ரோலை ஏற்றிச் சென்ற பௌசரில் எரிபொருள் தீர்ந்ததால் சுமார் 10 மணித்தியாலங்கள் அந்த பௌசர் வழியில் நிறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

புத்தளத்தில் உள்ள மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 19,800 லீற்றர் பெட்ரோலை ஏற்றிச் சென்ற தனியார் விநியோகஸ்தர் ஒருவருக்குச் சொந்தமான பௌசரே எரிபொருளின்றி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பௌசரில் எரிபொருள் தீர்ந்ததையடுத்து,

அதன் சாரதி அருகில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்த போதிலும்,

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து டீசல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *