ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக தேர்வான ஜல்லிக்கட்டு

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, 2021-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக ஜல்லிக்கட்டு என்ற மலையாள திரைப்படம் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு திரைப்படத்தை, லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.
2019-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது சிறந்த வெளிநாட்டு சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் இந்தியாவின் சார்பாக போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் வெளியான ‘கல்லி பாய்’ என்ற இந்திப் படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இறுதிப்பட்டியல் வரை இந்தப் படம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *