நாட்டில் பல இடங்களில் மழை….. இன்றைய காலநிலை முன்னறிவிப்பு! !

இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பான முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் வடமேற்கு கரையோரப் பிரதேசங்களிலும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் காலை வேளை சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *