News

அரச தனியார் பேருந்துகள் போட்டி ஓட்டம்….. தெய்வாதீனமாக பாரிய விபத்திலிருந்து தப்பின!!

வவுனியாவில் இரு பேருந்துகள் போட்டி போட்டு ஓடியதில் அவற்றில் ஓர் பேருந்து வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே நேற்று(17/12/2022) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் வீதியூடாக செட்டிக்குளம் செல்லும்

தனியார் பேருந்து ஒன்றும்,

வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் குறிப்பிட்ட இடத்திலிருந்து போட்டிபோட்டு ஒடியுள்ளன.

இதன்போது,

தனியார் பேருந்து சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து வீதியினை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில்,

பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *