மருதனார்மடத்தில் மேலும் 13 வியாபாரிகளுக்கு கொரோனா
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்ட 114 வியாபாரிகளின் மாதிரிகளில் இன்று (டிசெ. 15) செவ்வாய்க்கிழமை 13 வியாபாரிகளுக்கு தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
உடுவிலைச் சேர்ந்த 6 பேரும் தெல்லிப்பழையைச் சேர்ந்த 3 பேரும் நல்லூர், சண்டிலிப்பாய் ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த தலா 2 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது.
அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று காலை வெளியாகியுள்ளது. மேலும் சில மாதிரிகளின் முடிவுகளும் எதிர்பார்க்கப்படுகிறது.