நல்லூர் ஆலயத்துக்குள் வங்கி அட்டையை திருடி….. புடவை விற்பனை நிலையத்தில் ஆடைகளை கொள்வனவு செய்த வெளி மாவட்ட நபர் கைது!!

நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் நேற்றையதினம்(24/08/2022) கைது செய்துள்ளனர்.

மேலும்  இது குறித்து தெரியவருவதாவது,

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில்,

ஆலயத்துக்குள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் ஆலயத்துக்குள் கடமையிலிருந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பக்தர்களிடம் நூதனமாக திருடிய வங்கி அட்டையை பயன்படுத்தி ஆலயத்துக்கு அருகில் உள்ள புடவை விற்பனை நிலையத்தில் ஆடைகளை கொள்வனவு செய்த போதே குறித்த நபர் இனங்காணப்பட்டார்.

இதனையடுத்து,

துரிதமாக செயற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு கமராவின் உதவியுடன் குறித்த நபரை கைது செய்த நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *