மன்னாரிலுள்ள சிறுவர் இல்லத்தின் மீது மின்னல் தாக்கம்!
மன்னார் – பெற்றா பகுதியில் அமைந்துள்ள “வெற்றியின் நல் நம்பிக்கை இல்லத்தின்” மீது நேற்று பிற்பகல் மின்னல் தாக்கியுள்ளது. இவ் அனர்த்தம் ஏற்படும் போது குறித்த சிறுவர் இல்லத்திற்குள் சிறுமிகள் , பாடசாலை மாணவிகள் என 15 இருந்துள்ளனர்.
எனினும் அவர்களுக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இதனை அடுத்து சிறுமிகளும் உடனடியாக அங்கிருந்து வெளியேறற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நேற்றைய தினம் மாலை முதல் தொடர்ச்சியாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வந்தது. இந்த நிலையிலே குறித்த இல்லத்தின் மீது குறித்த அனார்த்தம் ஏற்பட்டது. மின்னல் தாக்கத்தினால் சிறுவர் இல்லத்தின் மின்சார கட்டமைப்புக்கள் எரிய ஆரம்பித்ததுடன் அயலவர்களின்உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின்சார சபைக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த மின்சார சபையினர் மின்சார இணைப்பை துண்டித்துள்ளனர்.