சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது!!
நிறைவுகாண் மற்றும் இடைநிலை மருத்துவ சேவையில் ஈடுபடும் 15 தொழிற்சங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
14 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (05) காலை ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையினால் வைத்தியசாலைகள் பலவற்றில் சிகிச்சைகள், மருந்து விநியோகம், ஆய்வுகூட சேவைகள், கதிரியக்க பரிசோதனைகள் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் சேவைகளைப் பெறுவதற்காக சென்ற நோயாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே, நேற்று மாலை சுகாதார அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லையென நிறைவுகாண் மற்றும் இடைநிலை மருத்துவ ஊழியர்களின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அவர் கூறினார்.