COVID: உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது, இன்று 3,051 பேருக்கு தொற்று!!
இலங்கையில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான COVID தொற்றாளர்கள் இன்று (19) பதிவாகியுள்ளனர்.
இன்று இதுவரை 3,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரை COVID தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,50,000-ஐ கடந்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்றிரவு 34 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1015 ஆக அதிகரித்துள்ளது.