இணையத்தில் வைரலாகி வரும் பறக்கும் கார் இயங்கும் காணொளி!!

முதல்முதலில் இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கும் பறக்கும் கார் துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,

பறக்கும் கார் இயங்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பறக்கும் காரை சீன எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான Xpeng Inc உருவாக்கியுள்ளது.

இந்த மின்சார வாகனத்திற்கு “எக்ஸ்-டூ”(X2) என பெயரிடப்பட்டுள்ளது.

இதில் இரண்டு இருக்கைகள் மட்டுமே காணப்படுகிறது.

மேலும்,

இந்த எலக்ட்ரிக் கார் செங்குத்தாக மேல் எழும்பி தரையிறங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,

காரின் இயக்க சோதனை 90 நிமிடம் நடைபெற்றது.

இதன் சோதனை ஓட்டத்தை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

சர்வதேச சந்தையில் இந்த கார் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *