17.44 சதவீதத்தால் இன்று முதல் அதிகரிக்கப்படும் பஸ் கட்டணம்!!

இன்று (05) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளன.

பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் கடந்த 29 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய பேருந்து பயணக் கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டதுடன்,

இன்று முதல் புதிய கட்டண முறை நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டது.

புதிய கட்டண அதிகரிப்பு தொடர்பிலான விசேட அறிவிப்பு அடங்கிய ஆவணங்கள், பயணிகள், பேருந்துகளின் உரிமையாளர்கள், பேருந்து ஊழியர்கள் என அனைத்து தரப்பிற்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாகவே இந்தக் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *