யாழ்.பல்கலையில் முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமனின் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நடைபெற்றது!!
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இன்று(01/11/2022) நண்பகல் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது,
செல்லத்துரை புருசோத்தமனின் நினைவுருவ படத்திற்கு பல்கலை மாணவர்ளால் ஈகைச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் இடம்பெற்றது.
தொடர்ச்சியாக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சினால் நினைவுரையும் நிகழ்த்தப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனான செல்லத்துரை புருசோத்தமன் இராணுவத்தினரால் கடந்த 2008.11.01 அன்று படுகொலை செய்யப்பட்டார்.