அரசியல்வாதி ஒருவரின் உறவினர் வீட்டிக்கு தொழிலுக்கு சென்ற சிறுமி….. சடலமாக மீட்பு!!

மலையகத்தில் இருந்து சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரின் உறவினர் வீட்டிக்கு தொழிலுக்கு சென்ற சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, மஸ்கெலியாமொக்கா தோட்டத்தை சேர்ந்த 17 வயதானவர் என கம்பஹா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி கம்பஹா உடுகம்பளை பகுதியிலுள்ள வீட்டுக்கு தொழிலுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்,

தொழிலுக்கு சென்ற வீட்டினுள் உள்ள நீச்சல் தடாகத்தில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

அதேவேளை,

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

மேலும்,

குறித்த சிறுமி பணியாற்றிய வீட்டின் உரிமையாளர் ஆளும் தரப்பின் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரின் உறவினர் எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *