புன்னாலைக்கட்டுவனில் 14 வயது சிறுமி சடலமாக மீட்பு!!

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

வீட்டில் யாரும் கவனிக்காத வேளை குறித்த சிறுமி தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக  யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *